search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்திருத்த பள்ளி"

    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர்.
    • தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீஸ் விசாரணையில் மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கு ஒன்றில் கைதான சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்புவது தெரிய வந்தது. மீதமுள்ள அனைத்து அறை களையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்ப தும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய 6 சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடினர்.

    இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

    • செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    தாம்பரத்தை அடுத்த கன்னட பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ஸ்ரீ (வயது 17). கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் பேட்டரி ஒன்றை திருடியதாக ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த 31-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுவன் கோகுல்ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை செய்தார். இதில் சிறுவன் தாக்கப்பட்டதில் இறந்து இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தபள்ளி கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட்ராஜ், விஜயகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் உள்ள கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா தலைமை தாங்கினார். தி.மு.க.வை சேர்ந்த ராஜி வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (19-ந் தேதி) அனைத்து கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப்படும்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் வருகிற 21-ந் தேதி அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஆசீர், ம.தி.மு.க.வை சேர்ந்த கே.பி.ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி முகமது யூனூஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×